5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

நாளையும் நாளை மறுநாளும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்துவரை கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com