கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, இந்திய ரயில்வேயில் பல முன்னேற்பாடுகளும் கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சில நகரங்களில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனைகளாகவே ரயில்கள் மாற்றப்பட்டன.
இந்த நிலையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணங்களுக்காக வசதிகளை அதிகப்படுத்த சாதாரண பெட்டிக்கு கூடுதலாக 3 லட்சம் ரூபாயும், குளிர்சாதன வதியுள்ள பெட்டிக்கு கூடுதலாக 6 லட்சம் ரூபாயும் செலவிடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கால்களால் இயக்கப்படும் வாஷ்பேஸின், கழிப்பறை, நீருற்றும் வசதி, வைரஸ் தொற்றாத காப்பர் பூசப்பட்ட கைப்பிடிகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகள் கொண்ட இரண்டு ரயில் பெட்டிகளை பஞ்சாப் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரித்துள்ளது.