ரயில் நிலையங்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

ரயில் நிலையங்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
ரயில் நிலையங்களில் நாளை முதல்  டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களை திறக்க மேலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமானச் சேவைகளுக்கு படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் 200 சிறப்பு ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரயில்நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களை திறப்பதற்கு ரயில்வே துறை மேலாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேசமயம் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளை முறையாக சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு சேவை நாளை முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com