'விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த அவகாசம் தாருங்கள்' - நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

'விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த அவகாசம் தாருங்கள்' - நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்
'விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த அவகாசம் தாருங்கள்' - நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

விவசாயிகள் பயிர்க் கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ளள அந்த கடிதத்தில், குறுகிய கால பயிர்களுக்காக விவசாயிகள் வாங்கியகடனை திருப்பி செலுத்துவதற்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த கடன்களுக்கான வட்டிகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வருமானம் இல்லாமல் தவித்து வருவதால், நிதியமைச்சர் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com