576 கோடி மதிப்புள்ள ஒரு ரஃபேல் விமானத்தை ஏன் 1670 கோடிக்கு வாங்கணும்’ ராகுல் சரமாரி கேள்வி

576 கோடி மதிப்புள்ள ஒரு ரஃபேல் விமானத்தை ஏன் 1670 கோடிக்கு வாங்கணும்’ ராகுல் சரமாரி கேள்வி

576 கோடி மதிப்புள்ள ஒரு ரஃபேல் விமானத்தை ஏன் 1670 கோடிக்கு வாங்கணும்’ ராகுல் சரமாரி கேள்வி
Published on

இந்திய அரசு பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கியுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியாவுக்கு இன்று வந்துள்ளன.

இதற்காக இந்திய விமானப்படையை ட்விட்டரில் பாராட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ராகுல் காந்தி. அதே நேரத்தில் அவர் இந்திய அரசாங்கத்திடம் ரஃபேல் குறித்து சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுள்ளார். 

அரசாங்கத்தின் முன் ராகுல் காந்தி வைத்துள்ள கேள்விகள்...

“576 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு ரஃபேல் விமானத்தையும் ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?

126 விமானங்களுக்கு பதிலாக ஏன் 36 விமானங்களை மட்டும் வாங்க வேண்டும்?

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றாக திவாலாகி போன அனில் அம்பானிக்கு எதற்காக முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது?” என சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com