’’எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது’’ - கொட்டும் மழையில் ராகுல்காந்தி பேட்டி

’’எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது’’ - கொட்டும் மழையில் ராகுல்காந்தி பேட்டி
’’எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது’’ - கொட்டும் மழையில் ராகுல்காந்தி பேட்டி

நாடாளுமன்ற வளாகத்தில் கொட்டும் மழையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல்காந்தி. அவருடன் 14 எதிர்க்கட்சிகளின் எம்.பிக்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கிவரும் நிலையில் 14 எதிர்க்கட்சிகளின் எம்.பிக்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் ராகுல்காந்தி பேட்டியளித்தார். அப்போது, ‘’நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு வருகிறது; ஜனநாயகத்தின்மீது தாக்குதல் நடக்கிறது.

பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு மறுத்துவருகிறது. பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக்கேட்டதா? இல்லையா? என்பதை விளக்கவேண்டும். ஒட்டுக்கேட்க பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்று தெரியவேண்டும்’’ என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com