'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம்

'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம்
'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம்

அமேதி தொகுதி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அமேதியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4-வது முறையாக அமேதியில் போட்டியிடும் ராகுல், "அமேதி என் குடும்பம்" என்ற பெயரில் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், அமேதி தொகுதி மக்கள் அனைவரும் எனது குடும்பம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வரும் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து தம்மை மீண்டும் வெற்றி பெறச் செய்யுமாறு கோரியுள்ளார். அமேதி மக்கள் கொடுத்த அன்பின் அடிப்படையில், நாட்டின் அனைத்து திசைகளையும் ஒன்று படுத்த முயல்வதாக ராகுல் கூறியுள்ளார்.

உண்மை, நேர்மை, எளிமையில், அமேதி வாக்காளர்களின் பலம் அடங்கியிருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ள ராகுல், அவர்கள் அளித்த துணிச்சலால்தான், தாம் உண்மையைப் பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பாஜகவால் தடுக்கப்படும் திட்டங்கள் துவங்கப்படும் என உறுதியளித்துள்ளார். நாட்டில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் முதலாவது விவசாயி, இளைஞர்கள், நலிவடைந்தோர், பெண்கள், சிறிய வர்த்தகர்கள், ஆகியோருக்காக காங்கிரஸ் வேலை செய்கிறது. இரண்டாவது 15- 20 தொழிலதிபர்களுக்கு பாஜக வேலை செய்ய விரும்புகிறது என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com