சீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்?

சீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்?

சீனா ஊடுருவல் தொடர்பான விவாதத்தின்போது ராகுல் தூக்கம்?
Published on

மக்களவையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பான விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையில் நிகழும் அச்சுறுத்தல் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அண்டை நாடுகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் மற்றும் ஊருடுவல் தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, கன்னத்தில் கைவைத்தபடி கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மக்களவை நடவடிக்கையின் போது ராகுல் காந்தி இவ்வாறு செயல்படுவது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி தூங்கியது போன்ற காட்சிகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com