காஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப் பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை தனி யூனியன் பிரதேசகமாகவும் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அங்கு சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி தலைமையில் 12 தலைவர்கள் டெல்லியிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட நிலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியுடன் குலாம் நபி ஆசாத், திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்டோரும் சென்றனர்.