டெல்லி காவல் துறையில் பணியாற்றி வந்த பெண், ரஃபியா சைஃ பி (வயது 21). நான்கு மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், ரஃபியா கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஒரு மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவரை கொலை செய்ததாக நிஜாமுதீன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், நிஜாமுதீனுக்கும் ரஃபியா சைஃபிக்கும் திருமணம் நடைபெற்றாகவும், திருமணத்தை ரஃபியாவின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இடையில் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ரஃபியா கொலை செய்யப்பட்டதாகவும் நிஜாமுதீன் கூறியதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.