பஞ்சாப் குண்டுவெடிப்பு: துப்புக்கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!

பஞ்சாப் குண்டுவெடிப்பு: துப்புக்கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!

பஞ்சாப் குண்டுவெடிப்பு: துப்புக்கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!
Published on

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ராஜஸ்சான்ஸி கிராமத்தில் நிரன்கரி பவன் என்ற பிரார்த்தனை மண்டபம் ஒன்று உள்ளது. அங்கு சிலர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த போது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கை குண்டை எறிந்து சென்றனர். குண்டு, கூட்டத் தில் விழுந்து வெடித்ததில் மூன்று பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரி கூறுகையில், இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பங்களிப்பு இருக்கலாம் எனவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் காவல்துறை எடுக்கவில்லை எனவும் அங்கு செய்தி பரவியது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை அமைப்பு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பினர் மாநில முதலமைச்சரிடமும்  உளவுத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள் ளார். 181- என்ற போலீஸ் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com