சித்து ராஜினாமாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்!

சித்து ராஜினாமாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்!

சித்து ராஜினாமாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்!
Published on

நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாமாவை பாஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஏற்றுக்கொண்டார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்தார். இவருக்கும் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் கடும் மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் வகித்து வந்த இலாகா பறிக்கப்பட்டு, வேறு இலாகா கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து புகார் அளித்தார் சித்து. 

பின்னர் மக்களவைத் தேர்தலில் பிரசாரங்களில் ஈடுபட்டார். அப்போது, ராகுல் காந்தி அமேதியில் தோற்றால், நான் அரசிய லை விட்டே விலகுவேன் என்று கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்கு பின், ’அரசியலைவிட்டு எப்போது விலகப் போகிறீர்கள்?’ என பாஜகவினர் சித்துவை எதிர்த்து போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்த நிலையில், அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10 ஆம் தேதி ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட் டரில் சித்து வெளியிட்டிருந்தார்.

அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து முதலமைச்சர் அமரீந்தர் சிங் எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் அவர், சித்து வின் ராஜினாமாவை ஏற்றுள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com