பஞ்சாப்: மனைவியை கொன்றுவிட்டு ராணுவ உயர் அதிகாரி விபரீத முடிவு! கடிதம் சிக்கியது!

பஞ்சாப்: மனைவியை கொன்றுவிட்டு ராணுவ உயர் அதிகாரி விபரீத முடிவு! கடிதம் சிக்கியது!
பஞ்சாப்: மனைவியை கொன்றுவிட்டு ராணுவ உயர் அதிகாரி விபரீத முடிவு! கடிதம் சிக்கியது!

பஞ்சாபில் ராணுவ உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஒருவர், தனது மனைவியை கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாபில் ஃபெரோஸ்பூர் நகரில் வசித்து வந்த இந்திய ராணுவ உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், வீட்டினுள் அவரது மனைவியும் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி லெப்டினன்ட் கர்னல், தற்கொலை குறிப்பை எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்டதும், அந்த குறிப்பில் தனது மனைவியை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டும் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தம்பதியினருக்கிடையில் குடும்ப பிரச்சனைகள் இருந்ததாகவும், அதற்காக இருவரும் சமீப காலங்களில் கவுன்சிலிங் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகையால் குடும்ப பிரச்சனையால தான் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, ராணுவமும், பஞ்சாப் போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னதாக ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் அரங்கேறி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com