புல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..!

புல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..!

புல்வாமா தாக்குதல் போன்று நடத்த சதி... கச்சிதமாக முறியடித்த ராணுவம்..!
Published on

புல்வாமா தாக்குதல் போன்ற மற்றொரு சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதிக்கு மிக அருகில் உள்ள கரேவா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 கிலோ வெடிப்பொருட்கள் இந்திய ராணுவத்தால் கண்டறியப்பட்டன. டேங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வெடிப்பொருட்களில், 125 கிராம் எடையுள்ள 416 வெடிபொருள் பாக்கெட்டுகளும், 50 வெடிகுண்டுகளும் இருந்ததாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கபட்டது. இந்த வெடிபொருட்கள் சூப்பர் -90 அல்லது எஸ் -90 என்ற பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் புல்வாமா தாக்குதல் போன்ற மற்றொரு சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பு இந்திய ராணுவத்தின் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய ராணுவம் பால்கோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் - இ- முகமது அமைப் பின் மீது தாக்குதல் நடத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com