ஜனவரி 23-ல் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-க்கு மாற்றம்

ஜனவரி 23-ல் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-க்கு மாற்றம்
ஜனவரி 23-ல் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-க்கு மாற்றம்

நாடு முழுவதும் வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தும் தேதியை மாற்ற வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தியிருந்தன. இதைத் தொடர்ந்து, போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி, தமிழகத்திலும் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்றே போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com