புதுச்சேரி: இலவசமாக மது கேட்டு மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

புதுச்சேரி: இலவசமாக மது கேட்டு மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

புதுச்சேரி: இலவசமாக மது கேட்டு மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்
Published on

புதுச்சேரியில் மதுபானக் கடையில் இலவசமாக மது கேட்டு பீர் பாட்டில்களால் இளைஞர்கள் மதுக்கடையை தாக்கிய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ளது தனியார் மதுக் கடைக்கு நேற்று இரவு வந்த மூன்று இளைஞர்கள், தங்களுக்கு இலவசமாக மது வேண்டும் என கடையில் இருந்த கேஷியர்யிடம் கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால், அவர் தர மறுத்துள்ளதை அடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் காலி பீர் பாட்டில்கள் மற்றும் கற்களால் மதுபானக் கடையை தாக்கியுள்ளனர்,

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது, இது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் கடையின் கேஷியர் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதுபானக் கடையை தாக்கியது வில்லியனூர் மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரபா மற்றும் ஸ்டீபன் என்று தெரியவந்துள்ளது இதனையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com