“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” - மாநில முதல்வர் ரங்கசாமி

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” - மாநில முதல்வர் ரங்கசாமி
“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” - மாநில முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் தென்மாநில முதலமைச்சர் மாநாட்டில் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற  தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், புதுச்சேரி மாநில நிதிநிலைக்கு 1.5 சதவீதம் தான் கூடுதல் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியது, ஆனால் குறைந்த பட்சம் ரூ.1,500 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு ரூ.500 கோடி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரங்கசாமி மத்திய அரசிடம் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com