புதுச்சேரி: 6 மாதங்களாக பூட்டிய வீட்டிற்குள் பிராணிகளுடன் இருந்த தாய், மகன்... - அதிர்ச்சி சம்பவம்!

தாயையும் மகனையும் மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் சசிகலா. அரசு ஊழியரான இவர், கணவரைப் பிரிந்து தனது 12 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. பணிக்குச் செல்லாததுடன், தனது மகனையும் பள்ளிக்கு அனுப்பவில்லை என அவரை பிரிந்து வாழும் கணவர், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர், போலீசாருடன் அந்த வீட்டுக்குச் சென்று தாயையும் மகனையும் மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com