புதுச்சேரி: பட்ஜெட் தாக்கலாகி 3 நாட்களுக்குப் பின் இன்று உரையாற்றவுள்ள ஆளுநர் கிரண்பேடி!

புதுச்சேரி: பட்ஜெட் தாக்கலாகி 3 நாட்களுக்குப் பின் இன்று உரையாற்றவுள்ள ஆளுநர் கிரண்பேடி!
புதுச்சேரி: பட்ஜெட் தாக்கலாகி 3 நாட்களுக்குப் பின் இன்று உரையாற்றவுள்ள ஆளுநர் கிரண்பேடி!

புதுச்சேரி பேரவையில் ஆளுநர் கிரண்பேடி இன்று காலை 9.30 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் கிரண்பேடி உரையாற்ற மறுத்த நிலையில் அவரது எதிர்ப்பையும் மீறி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் பெரும் புயலை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கிரண்பேடி இன்று பேரவையில் உரையாற்ற உள்ளார். பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு ஆளுநர் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com