கொத்தடிமைகளாக வைத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - புதுச்சேரியில் நிகழ்ந்த கொடூரம்

கொத்தடிமைகளாக வைத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - புதுச்சேரியில் நிகழ்ந்த கொடூரம்
கொத்தடிமைகளாக வைத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - புதுச்சேரியில் நிகழ்ந்த கொடூரம்

புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்து 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியை அடுத்துள்ள சாத்தமங்கலம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வாத்து பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த இவரிடம் 6 வயது முதல் 14 வயது உள்ள 5 சிறுமிகள், கடந்த 2 வருடங்களாக தங்கி, வாத்து மேய்க்கும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து கடந்த மாதம் குழந்தைகள் நல அமைப்பினர் 5 சிறுமிகளையும் மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் மற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாகவும் தெரியவந்தது. இது குறித்து மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், 5 சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பதாக மங்கலம் காவல் நிலையத்தில் புகார் வந்தது.

இதனையடுத்து 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்குமார், பசுபதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவின் கீழ் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com