அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான மூன்று வருகைகளுக்குப் பிறகு,  அசாமில் பிரியங்கா காந்தி கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேரா, தனது கட்சிக்காக பரப்புரை செய்வதற்காக நாளை அசாமிற்கு செல்கிறார். தனது இரண்டு நாள் பயணத்தின் போது, அவர் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள பல மாவட்டங்களுக்குச் செல்கிறார். ப்பகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியுமான ஏஜிபியும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. இப்பகுதிக்கு செல்லும் பிரியங்கா, முதலில் குவஹாத்தியாக காமக்யா கோயிலுக்கு சென்று கட்சி சார்பாக பிரார்த்தனை செய் பின்னர், லக்கிம்பூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கவிருக்கிறார்.

குடியுரிமை எதிர்ப்புத் திருத்தச் சட்டத்தின்போது கடுமையான எதிர்ப்புகளைக் கண்ட மேல்பகுதி அசாம் என்பது, இப்போது தேர்தல் ரீதியாக முக்கியமானது. தற்போது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பாஜக இப்பகுதிக்கு பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிராந்தியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான மூன்று வருகைகளுக்குப் பிறகு, பிரியங்கா காந்தி தேராவின் வருகை எதிர்க்கட்சியின் பிரச்சாரத்திற்கு வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com