டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கேதார்நாத் புறப்பட்டார். டேராடூன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் குர்மித் சிங் மற்றும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத் சிவன் கோவிலில் தீபாராதனை செய்து வழிபட்டார். தொடர்ந்து அவர் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியாரின் உருவச் சிலையை திறந்து வைத்து, புதுப்பிக்கப்பட்ட சமாதி ஸ்தலத்தையும் திறந்து வைத்தார்.