சுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி 

சுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி 

சுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி 
Published on

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

67 வயதான சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் உள்ள இல்லத்திற்கு சென்று சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சுஷ்மாவின் கணவர் கவுசல், மகள் பாசுரிக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவும் அஞ்சலி செலுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

மேலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி செலுத்தினர். பாஜக எம்.பிக்கள் அனுராக் தாகூர், பாபுல் சுப்ரியோ, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சுஷ்மாவின் உடல் பாஜக அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. 

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com