காவல்துறை வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... விவரம் கேட்டறிந்த பிரதமர் மோடி

காவல்துறை வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... விவரம் கேட்டறிந்த பிரதமர் மோடி
காவல்துறை வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... விவரம் கேட்டறிந்த பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் காவல்துறையினர் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் காவல்துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், காவல்துறையினரின் வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் காவலர்கள் இருவர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மேலும் 12 காவலர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பயங்கரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com