இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் கால நிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிளாஸ்கோ மாநாட்டில் நேற்றுமுன்தினம் பேசிய பிரதமர் மோடி, வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என உறுதியளித்தார். நேற்று மீண்டும் உரையாற்றிய பிரதமர், ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொடரமைப்பு திட்டத்தை முன்மொழிந்தார். இதன்மூலம், சூரிய மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தமுடியும் என பிரதமர் தெரிவித்தார். மேலும், உலகம் முழுவதும் எங்கெல்லாம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கீடு செய்யும் முறையை, இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வழங்கும் என்றார்.