"பிரதமர் மோடி தினசரி 2 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்" - சந்திரகாந்த் பாட்டீல்

"பிரதமர் மோடி தினசரி 2 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்" - சந்திரகாந்த் பாட்டீல்
"பிரதமர் மோடி தினசரி 2 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்" - சந்திரகாந்த் பாட்டீல்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக கடுமையாக உழைப்பதாகவும் இதனால் அவர் தினசரி 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கோலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பரப்புரை தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 2 மணி நேரம் தூங்குவதையும் தவிர்த்து மேலும் உழைக்க பிரதமர் முயற்சி செய்து வருவதாகவும் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் அறிந்து வைத்திருப்பதாகவும் சந்திரகாந்த் பாட்டீல் கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com