தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

நாடு முழுவதும் நூறு கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சீரம் நிறுவனத் தலைவர் அடர் பூனாவாலா உள்பட தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனாவாலா, குறைந்த செலவில், அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டதற்கு பிரதமர் எடுத்த துரிதமான முன்னெடுப்புகளே காரணம் என்றார். அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான், தற்போது மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com