“இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை” - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் மேற்கொண்டார்
திருப்பதியில் பிரதமர் மோடி
திருப்பதியில் பிரதமர் மோடி@narendramodi

பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு சென்றார்.

திருப்பதியில் பிரதமர் மோடி
திருப்பதியில் பிரதமர் மோடி

ரேனிகுண்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார். பின்னர் சாலை மார்க்கமாக திருமலைக்கு சென்ற மோடி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

திருப்பதியில் பிரதமர் மோடி
திருப்பதியில் பிரதமர் மோடி

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அவரை, தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து ஏழுமலை கோயிலில் மோடி தரிசனம் செய்தார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com