\
“இன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன்”- பிரதமர் மோடி

“இன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன்”- பிரதமர் மோடி

“இன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன்”- பிரதமர் மோடி
Published on

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தகவலுடன் நாட்டுமக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பேசவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேச உள்ளார். மேலும் ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற பிரதமர் அறிவுறுத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com