பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

வெற்றிபெற்ற 19 வீரர்களுடன், கலந்துரையாடிய புகைப்படைத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுது. உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களிடம் தங்களுடைய அனுபவத்தை கேட்டறிந்த பிரதமர், நாட்டின் பெருமைக்காக இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் எனவும், பல திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். அனைத்து வீரர்களுக்கும் பிரதமர் தேநீர் விருந்தும் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com