மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி 

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி 

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி 
Published on

ஆளுநரின் பரிந்துரை செய்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வந்தது முதல், ஆட்சி அமைப்பத்தில் குழப்பமான சூழல் நிலவி வந்தது. அங்கு அதிக இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் அதனை பாஜக நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

அத்துடன் ஆளுநரிடம் தங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சிவசேனா கோரிக்கை வைத்தது. எனினும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இதனை நிராகரித்தார். இதனையடுத்து நேற்று இரவு இவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இன்று இரவு 8.30 மணிவரை அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 

மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி அமைய பரிந்துரை செய்ததாக ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் மதியம் 2 மணியளவில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தால் அதனை எதிர்த்து சிவசேனா கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறியது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com