பிரசவத்தின் போது கர்ப்பிணி பலி: விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண் டாக்டர்

பிரசவத்தின் போது கர்ப்பிணி பலி: விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண் டாக்டர்
பிரசவத்தின் போது கர்ப்பிணி பலி: விரக்தியில் விபரீத முடிவு எடுத்த பெண் டாக்டர்

பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்த விரக்தியில் சிகிச்சையளித்த பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் லால்சொட் பகுதியில் மருத்துவர் அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. மருத்துவர் அர்ச்சனா ஷர்மா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். ஆனால், பிரசவத்தின் போது அந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அலட்சியமான மற்றும் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் அர்ச்சனா மீது போலீசார் லால்சோட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ சிகிச்சையின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் இறந்ததற்காக மருத்துவர் அர்ச்சனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான அர்ச்சனா மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை வழக்குப்பதிவு செய்த விரக்தியில் சிகிச்சையளித்த பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com