நீட் தேர்வு: எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரிப்பு

நீட் தேர்வு: எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரிப்பு

நீட் தேர்வு: எதுவும் செய்ய முடியாது என மத்திய அரசு கைவிரிப்பு
Published on

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்கும் விவகாரத்தில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி நீட் கொண்டு வரப்பட்டுள்ளதால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி தமிழக அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், சிபிஐ சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமில்லை என்று விளக்கமளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com