புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
கொரோனா பரவும் சூழல் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து அது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.