முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு - ஜார்க்கண்ட் தேர்தலில் அறிமுகம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு - ஜார்க்கண்ட் தேர்தலில் அறிமுகம்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு - ஜார்க்கண்ட் தேர்தலில் அறிமுகம்
Published on

நாட்டிலே முதன்முறையாக ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு முறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் அறிவிப்பை அடுத்து ஜார்க்கண்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி 80 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் 2.19 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 2.16 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com