"தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும்"-பிரதமர் மோடி

"தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும்"-பிரதமர் மோடி

"தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும்"-பிரதமர் மோடி
Published on

நிவர் புயல் தொடர்பாக தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ட்விட்டர் பதிவில் "நிவர் புயல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடனும் தொலைப்பேசியில் பேசினேன். அப்போது புயல் தொடர்பாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். புயலால் பாதிக்கப்பட இருக்கும் இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்ப இருக்க நான் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com