நாடு முழுவதும் ஜன.31-ல் போலியோ சொட்டுமருந்து முகாம்!

நாடு முழுவதும் ஜன.31-ல் போலியோ சொட்டுமருந்து முகாம்!
நாடு முழுவதும் ஜன.31-ல் போலியோ சொட்டுமருந்து முகாம்!

ஜனவரி 31ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தற்போது ஜனவரி 17இல் நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டுமருந்து முகாம் ஜனவரி 31ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com