’பர்தா’ அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி கைது!

’பர்தா’ அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி கைது!

’பர்தா’ அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி கைது!
Published on

பர்தா அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் தொடுபுழாவில், அல்-அசார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்தார். மருத்துவமனையில் ஓரத்தில் இருந்த தொழிலாளர்களின் அறைக்குள் நுழைந்தார். அங்கிரு ந்த பெண் தொழிலாளர்கள் ’யார் நீங்க, என்ன வேணும்?’ என்று அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பேச்சும் திடகாத்திரமான உடல்வாகும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. செக்யூரிட்டிக்கு அவர்கள் போன் செய்தனர்.

இதையறிந்த அந்த பர்தா பெண், தப்பி ஓடினார். இருந்தாலும் செக்யூரிட்டிகள் விரட்டி பிடித்து அடித்தனர். அப்போது முகத்தில் இருந்து பர்தா  விலக, அது அந்தப் பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி நூர் சமீர் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். 

’அவ்வை சண்முகி’ வேடத்தில் இங்கு ஏன் இவர் வரவேண்டும்? என்று சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித் தனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், சமீர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து சமீர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். பின் னர் அவர் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். 

‘ஃபிரண்டை பார்க்க மருத்துவனைக்குச் சென்றேன். ஆனால், அவரைப் பார்க்க முடியவில்லை’ என்று சமீர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரி டம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com