திருப்பதி கோவிலில் கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் - தேவஸ்தானம் வெளியிட்ட வீடியோவில் அதிர்ச்சி!

திருப்பதி கோவிலில் கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் - தேவஸ்தானம் வெளியிட்ட வீடியோவில் அதிர்ச்சி!
திருப்பதி கோவிலில் கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் - தேவஸ்தானம் வெளியிட்ட வீடியோவில் அதிர்ச்சி!

திருப்பதி திருமலையில் 5 வயது குழந்தை கடத்தப்பட்டதுள்ளது. தேவஸ்தான கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் தெரிந்தால் தகவல் அளிக்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு நாமம் போடும் பணி செய்துவரும் வெங்கட்ரமணா என்பவர் தமது 5 வயது மகனான கோவர்த்தன் என்பவரை உடன் வைத்துகொண்டு பணி செய்துகொண்டிருந்தபோது திடீரென கோவர்த்தன் காணாமல் போயுள்ளார். திருமலையின் பல்வேறு பகுதிகளில் தேடியும் கோவர்த்தன் கிடைக்காததால், திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை செய்துவரும் காவல்துறையினர், தேவஸ்தான கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது, மொட்டையடிக்கப்பட்ட தலையுடன் உள்ள பெண் ஒருவர், 5 வயது சிறுவனை அழைத்துச்செல்வது தெரியவந்துள்ளது.

திருமலையில் உள்ள பாலாஜி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி பேருந்தில் ஏறுவதும் பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு பின் எங்கு இறங்கினார் என்று தெரியதாத நிலையில், அது குறித்த காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com