'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து

'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து
'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து

உத்தரப்பிரதே போலீசார் சுபோத் குமார் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து நடந்த வன்முறையில் சுபோத் குமார் சிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். 

போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் பேராட்டக்காரர்களின் கல்லெறித் தாக்குதலில் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் மீது வன்முறையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுபோத் குமார் சிங் உயிரிழப்பு குறித்து உத்திரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சுபோத் குமார் அவரை அறியாமலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த போலீஸ் அதிகாரி சுபோத் குமார்,  என்கவுண்ட்டர் செய்வதில் சிறந்து விளங்கியவர். ஒரு முறை தன் பாதுகாப்புக்காக தன் கையிலேயே சுட்டுக்கொண்டுள்ளார். இந்த முறையும் அப்படி முயற்சி செய்திருப்பார். அது தவறுதலாகி, குண்டு தலையில் பாய்ந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போலீஸ் அதிகாரியின் உயிரிழப்பில் பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அங்கு பெரிய கலவரம் நடந்தது. கற்கள் வீசித்தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரக்காரர்களை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் உயிரிழந்த போலீசாரின் உடலில் மட்டுமே குண்டு துளைத்தது எப்படி  என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

முன்னதாக துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னரே போலீசார் கோடாரி கொண்டு தாக்கப்பட்டதாகவும், தாக்குதலில் அவரது கட்டைவிரல் துண்டுபட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com