\
மசூதி அருகே போலீஸ் அதிகாரி கொலை

மசூதி அருகே போலீஸ் அதிகாரி கொலை

மசூதி அருகே போலீஸ் அதிகாரி கொலை
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி ஒருவரை அடையாமல் தெரியாத கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் நவுகட்டா அருகே உள்ளது ஜமியா மசூதி. இங்கு இன்று அதிகாலை 3 மணியளில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. மசூதிக்கு வெளியே போலீஸ் துணை கண்காணிப்பாளர் முகமது ஆயுப் பண்டிட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மசூதியில் இருந்து வெளியே வருபவர்களை, அங்கு நின்றுகொண்டிருந்த ஒருசிலர் அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்தனர். இதனை அறிந்த போலீஸ் அதிகாரி, புகைப்படம் எடுத்தவரை கண்டித்ததோடு அதைத் தடுத்து நிறுத்தினார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டது. எனவே அந்த போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரம் கழித்து அந்தப்பக்கம் வந்த அடையாம் தெரியாத கும்பல் ஒன்று போலீஸ் அதிகாரியை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com