police enquiry on delhi cm rekha gupta attacked
ரேகா குப்தா, ராஜேஷ்எக்ஸ் தளம்

டெல்லி முதல்வர் மீது தாக்குதல்.. கைது செய்யப்பட்ட நபர்.. விசாரணையில் வெளியான தகவல்!

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை குறைதீர் கூட்டத்தில், நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடந்தது. குடிபோதையில் இருந்த நபர் கத்தியுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக அவரை பிடித்தனர். பாஜக அரசியல் சதி எனக் கூறி, விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்

டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக ரேகா குப்தா உள்ளார். இந்த நிலையில், அவர் டெல்லியின் சிவில் லைன்ஸில் உள்ள தனது வீட்டில், மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து அவர் மனுக்களைப் பெற்றிருந்தார். அந்தச் சமயத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. நேரில் கண்ட சாட்சிகளின்படி, அந்த நபர் கத்தியபடியே முதல்வரைத் தாக்கியுள்ளார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறியுள்ளனர். எனினும், முதலமைச்சரைத் தாக்கிய உடனேயே அவரது பாதுகாப்புப் பிரிவினர் அந்த நபரைப் பிடித்தனர், மேலும் தாக்குதலுக்கு என்ன காரணம் என்று டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

police enquiry on delhi cm rekha gupta attacked
ரேகா குப்தாஎக்ஸ் தளம்

இந்த தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. முதல்வரின் பணிகளை போட்டியாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், தாக்குதல் நடத்தியவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

police enquiry on delhi cm rekha gupta attacked
டெல்லி | முதல்வரானார் ரேகா குப்தா.. 6 அமைச்சர்கள் உட்பட பதவியேற்றவர்களின் பின்னணி என்ன?

முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்!

முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான அதிஷியும், இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். அவர், "டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடு மற்றும் போராட்டத்திற்கு இடமுண்டு. ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். முதலமைச்சர் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடு மற்றும் போராட்டத்திற்கு இடமுண்டு. ஆனால் வன்முறைக்கு இடமில்லை.
அதிஷி, எதிர்க்கட்சித் தலைவர்
police enquiry on delhi cm rekha gupta attacked
ரேகா குப்தா, அதிஷிஎக்ஸ் தளம்

இதற்கிடையே டெல்லி முதல்வர் ரேகா குப்தாவைத் தாக்கிய நபர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். டெல்லி போலீசார் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜேஷ் ஒரு நாய் பிரியர் என்றும், டெல்லி NCR இல் தெருநாய்களை சுற்றி வளைத்து தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பால் வருத்தமடைந்ததாகவும் அதற்காக முதலமைச்சரின் உதவியை நாட பொதுக் கூட்டத்திற்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

police enquiry on delhi cm rekha gupta attacked
உச்சக்கட்ட ஏற்பாடு: டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா! அமைச்சர்கள் யார், யார்?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com