கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை - மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை - மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ
கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை - மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகாவில் மடாதிபதி உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சித்ர துர்காவில் இருக்கும் முருக மடத்தின் சார்பாக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மடாதிபதியாக இருக்கும் சிவமூர்த்தி முருக சரணரு, மாணவிகள் இருவரை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சமூக அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மாணவிகளை மீட்டனர். புகார் குறித்து விசாரணை நடத்திய சித்ர துர்கா போலீசார், மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, விடுதி வார்டன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com