எதிர்கட்சி வரிசைக்கு சென்று மோடி சோனியாவுக்கு வாழ்த்து

எதிர்கட்சி வரிசைக்கு சென்று மோடி சோனியாவுக்கு வாழ்த்து

எதிர்கட்சி வரிசைக்கு சென்று மோடி சோனியாவுக்கு வாழ்த்து
Published on

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்நாளில் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு அவர்களது இருக்கைக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி, எதிர்கட்சி எம்பிக்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு சென்றார். அங்கிருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, சமாஜ்வாதிக் கட்சியின் முலாயம் சிங் யாதவ், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். எதிர்கட்சி உறுப்பினர்கள் இருக்கையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் முகமன் கூறினார். அதேபோல், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். இந்தியா-சீனா எல்லை பிரச்னை மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவைகளை மழைக்காலக் கூட்டத்தொடரின் போது எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்கட்சி எம்பிக்களின் இருக்கைக்கே சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com