ஏசு கிறிஸ்துவின் கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களுக்கு வலிமையை தருகிறது - பிரதமர் மோடி ட்விட்

ஏசு கிறிஸ்துவின் கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களுக்கு வலிமையை தருகிறது - பிரதமர் மோடி ட்விட்
ஏசு கிறிஸ்துவின் கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களுக்கு வலிமையை தருகிறது - பிரதமர் மோடி ட்விட்

இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளையொட்டி உலகம் முழுக்க இருக்கும் கிறிஸ்துவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்தியாவிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தப் பதிவில், “ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தைத் தருகின்றன. அவரது பாதை ஒரு நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான வழியைக் காட்டட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com