
பிரதமர் மோடி இன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், 'மனதின் குரல்' எனப்படும் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 74-வது முறையாக இந்த நிகழ்ச்சியில் இன்று பிரதமர் உரையாற்றுகிறார்.