\
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி !

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி !

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி !
Published on

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல இடங்களில் வழக்கமான நடைமுறைகள் இல்லை. டெல்லியில் பிரதமர் மோடி இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும் எனத் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com