இந்தியா
“அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்ற கட்டடத்தில்தான் வடிவம் கொடுக்கப்பட்டது” - பிரதமர் மோடி
பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர், “புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று இடம்பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம்; விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை தொடங்குகிறோம்.
அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்ற கட்டடத்தில்தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் 4,000 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது” என்றெல்லாம் கூறி புகழாரம் செய்தார். முழு காணொளியை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.