வாஜ்பாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

வாஜ்பாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

வாஜ்பாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இந்தியா தனது அன்பான தலைவரை இழந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதென எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வாஜ்பாய் உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய நேரப்படி, மாலை 5.05க்கு பிரிந்தது. இதனையொட்டி பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்தியா தனது அன்பான தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயை இழந்துவிட்டது. அவரது மறைவால் ஒரு சகாப்தம் நிறைவடைந்தது. அவர் தேசத்திற்காக சேவை செய்து, தன்னை அற்பணித்தவர். அவரது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்கள் மற்றும் வாஜ்பாயின் லட்சக்ணக்கான தொண்டர்களுக்கு, இந்தத் துக்கமான நேரத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி. அவரது தலைமை இந்தியாவின் அடித்தளத்தை வலிமைப்படுத்தியது. அவருடன் இருந்த நினைவுகள் எண்ணிக்கையற்றது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com