கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காக மோடி ரூ.21 லட்சம் நன்கொடை

கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காக மோடி ரூ.21 லட்சம் நன்கொடை
கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காக மோடி ரூ.21 லட்சம் நன்கொடை

கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் நலனுக்காக தன்னுடைய சொந்த வங்கிக்கணக்கிலிருந்து  ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 

உத்திரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் நாட்டிலிருந்து பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அப்போது துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு கவுரம் செய்தார். பின்னர் பேசிய அவர்,  துப்புரவுத் தொழிலாளர்களின் அயராத உழைப்பால்தான் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகர் தூய்மையாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். 

துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை பிரதமர் மோடி கழுவியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. தேர்தலை அடுத்து மோடி நாடகமாடுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் நலனுக்காக தன்னுடைய சொந்த வங்கிக்கணக்கிலிருந்து  ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக பிரதமர் மோடி வழங்கியுள்ளார். 

ரூ.21 லட்சத்தை கும்பமேளாவின் நன்கொடை கணக்குக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார். அந்தப்பணம் கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com